News May 24, 2024

கடலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் கோடை மழை பெய்து வருகிறது. அதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் மின்சார உபகரண பெட்டிகளை தொட கூடாது. மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ , சேதமடைந்த மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பி, சேதமடைந்த ஸ்டே கம்பிகள் இருந்தாலும் 9498794987 என்ற அரசின் கட்டணமில்லா சேவை எண்ணில் தெரிவிக்கலாம் என கடலூர் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

கடலூர்: பால் கடை உரிமையாளர் பிணமாக மீட்பு

image

காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 64) இவர் கடைவீதியில் தனியார் பால் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். நவ.4ம் தேதி பால் கடையை திறக்க வந்த செந்தில் கடைக்கு வராமல் மாயமானார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், அங்கு இருந்த சாக்கடை கால்வாயில் பிணமாக நேற்று மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

News November 8, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

கடலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 9 உணவகங்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!