News January 6, 2025
கடலூர் மக்களுக்கு எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வமிகுதியால் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகின்றன. மேலும் தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 9, 2026
கடலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
கடலூர்: குட்டையில் மிதந்த பிணம்

கடலூர் முதுநகர் அடுத்த சுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (63). மீனவரான இவர் கடந்த மாதம் 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடலூர் செல்லங்குப்பம் மீன்பிடி குட்டையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் பிணமாக மிதந்துள்ளார். தகவலறிந்த முதுநகர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி, தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரித்து வருகின்றனர்.


