News December 22, 2025

கடலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில்,<> hrcnet.nic.in <<>>என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்

Similar News

News December 23, 2025

கடலூர்: கார்கள் மோதி விபத்து-இருவர் பலி!

image

ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (63). இவர் உறவினர் 6 பேருடன் நேற்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு காரில் மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் புஷ்பராஜ் மற்றும் மஞ்சுளா(42) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 22, 2025

கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

image

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 22, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!