News September 14, 2025
கடலூர்: புதிய கமிஷனர் நியமனம்

கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு 128 நாட்கள் ஈட்டிய விடுப்பில் செல்கிறார். இதனால் அவருக்கு பதிலாக கடலூர் மாநகராட்சியின் கமிஷனராக, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் விரைவில் கடலூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். SHARE NOW!
Similar News
News September 14, 2025
கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
News September 14, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.13) இரவு 10 மணி முதல் இன்று (செப்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
விஷ பூச்சி கடித்து இளம்பெண் பலி

சிதம்பரம் அடுத்த கீழ்செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவி (19). இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. இந்நிலையில், தேவி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் தேசிங்குராஜன் வீட்டில் படுத்திருந்த போது, விஷ பூச்சி கடித்துள்ளது. பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.