News December 28, 2025
கடலூர்: பஸ் – கார் மோதி விபத்து!

புதுச்சேரியில் இருந்து நேற்று கடலூர் நோக்கி வந்த கார் சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார், எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரின் டிரைவர் மரிய சகாயம் மற்றும் 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 30, 2025
கடலூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்!

கடலூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
கடலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிதம்பரத்தில் இயங்கும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடை எண் 2404, ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கடை எண் 2522 ஆகிய 2 மதுபான கடைகளும் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
கடலூர்: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <


