News October 14, 2025
கடலூர்: பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை

கடலூர் மாவட்டம், குமராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்ற சேட்டு (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News October 14, 2025
கடலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
News October 14, 2025
கடலூர்: 4 போலீசார் அதிரடி இடமாற்றம்

கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலர் தீனதயாளன், கடலூர் புதுநகர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துக்குமாரன் ஆகியோரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
கடலூர்: போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனை!

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஜெயராமன், சாரதி, மல்லிகா, பிரகாஷ், ஆகியோரை புதுநகர் காவல் போலீசார் கடந்த அக்.13 அன்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சில போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.