News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
கடலூர்: இலவச மீன் வளர்ப்பு தொழிற்பயிற்சி!

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மீன் வளர்ப்பு இலவச தொழிற்பயிற்சி வகுப்பிற்கான நேர்காணல் டிச.20-ல் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் காலை மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04142 – 796183 8489949789, 9629752271, 9092493827 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் மனைவி பானுமதி(53). இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.1.95 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
கடலூர்: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


