News January 8, 2026
கடலூர்: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 20, 2026
கடலூர்: மனமுடைந்த முதியவர் தற்கொலை முயற்சி

ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதியவர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(75), என்பதும் பிள்ளைகள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து, தற்கொலை முயற்சித்ததும் தெரிய வந்தது. இதையெடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
கடலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


