News February 16, 2026

கடலூர்: துப்பாக்கி தோட்டாக்களை ஒப்படைக்க உத்தரவு

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உரிமம் பெற்று வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

கடலூர்: சமையல் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

image

திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலத்தை சேர்ந்தவர் அஞ்சலம் (37). இவர் வீட்டின் பின்புறம் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்து படுகாயமடைந்த அஞ்சலம், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News February 17, 2026

கடலூர்: அரசு அலுவலருக்கு சிறை- கோர்ட் அதிரடி

image

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2011-ல் சமூக நல விரிவாக்க அலுவலர் கலைச்செல்வி, ஊர் நல அலுவலர் இந்திராணி ஆகியோர் திருமண உதவித் தொகை வழங்க ரூ.1000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகினர். கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று (பிப்.16) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளி கலைச்செல்வி இறந்த நிலையில், 2-வது குற்றவாளியான இந்திராணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News February 17, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!