News November 18, 2025

கடலூர்: தீயில் கருகிய இளம்பெண்

image

புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் சந்திரலேகா (36). இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாயமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…

error: Content is protected !!