News December 16, 2025

கடலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை

image

சிறுபாக்கம் அடுத்த மேலக்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அனிதா (29). கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த அனிதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்று (டிச.16) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 17, 2025

கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <>TamilNilam Geo-Info<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் நிலம் உள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால், நிலத்தின் பட்டா விவரம், FMB, இருப்பிடம் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 17, 2025

கடலூர் மாவட்டத்தில் 551.7 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிச.17) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம், கொத்தவாச்சேரி 64 மில்லி மீட்டர் மழை, பரங்கிப்பேட்டை 49.8 மில்லி மீட்டர் மழை, லால்பேட்டை 48.8 மில்லி மீட்டர் மழை, ஸ்ரீமுஷ்ணம் 32.1 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 25.3 மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் 551.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News December 17, 2025

கடலூர்: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

image

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!