News January 24, 2026
கடலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மங்களபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 8, 2026
கடலூர்: 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்.1 ஆம் தேதி முதல் கடந்த ஜன.31 ஆம் தேதி வரை 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொழுநோய் பரவல் விகிதம் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் உள்ளதாக மாவட்ட தொழு நோய் அதிகாரி தெரிவித்துள்ளார்.
News February 8, 2026
கடலூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
கடலூர்: அழுகிய நிலையில் சடமாக கிடந்த முதியவர்

கடலூர் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). இவர் செல்லங்குப்பம் அருகில் உள்ள குட்டையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, குட்டையில் இருந்து கிடந்த ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


