News February 26, 2026
கடலூர்: தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்

குமராட்சி பகுதியில் உள்ள உப்பனாற்றில் நேற்று 35 வயது வாலிபர் ஒருவர் தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமராட்சி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.
Similar News
News February 28, 2026
கடலூர்: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

சிதம்பரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முகுந்தன்(14). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த முகுந்தன், நேற்று அருகே உள்ள வண்ணான் குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற முகுந்தன், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 28, 2026
கடலூர்: காரில் ஆடுகள் திருடிய இளைஞர் கைது

காடாம்புலியூர் அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(45). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் அங்கு காரில் வந்த 3 பேர், முத்துலட்சுமியின் 4 ஆடுகளை காரில் திருடி சென்றனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து பண்ருட்டியை சேர்ந்த விஷ்ணுவரத்தை(19) கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
News February 27, 2026
கடலூர் மாவட்டத்தில் 18,919 டன் உரம் இருப்பு- ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,558 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2,242 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,810 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,853 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,457 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 18,919 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் தடையின்றி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


