News September 9, 2025

கடலூர்: தப்பி ஓடியவரை சுட்டுப்பிடித்த போலீசார்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பி ஓடினார். மேலும் தப்பியோடிய கந்தவேல் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 9, 2025

கடலூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 10ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வன்னியர் திருமண மண்டபம் கடலூர், புஷ்பாவதி திருமண மண்டபம் காராமணிக்குப்பம், புயல் பாதுகாப்பு மையம் சின்னூர் புதுப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கானூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 9, 2025

ஆலப்பாக்கம்: வீடுகள் கட்டுமான பணி-ஆட்சியர் ஆய்வு

image

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (09.09.2025) காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் இருந்தனர்.

error: Content is protected !!