News November 24, 2025
கடலூர்: தபால் நிலையம் அருகே கிடந்த ஆண் சடலம்

மஞ்சகுப்பம், தலைமை தபால் நிலையம் ஆட்டோ நிறுத்தம் அருகே முகவரி மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட து. இறந்து கிடந்த வரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கடலூர் புது நகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னாவை 9941408190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.


