News March 28, 2024
கடலூர்: செல்போன் வெடித்து விபத்து

கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் நேற்று மாலை கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது தாய் மற்றும் பாட்டியுடன் பைக்கில் சென்றார். அப்போது புஷ்பராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், மூவரும் நிலைகுலைந்து பைக்குடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News April 18, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
News April 18, 2025
கடலூர் மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதிங்க

கடலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள், இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மே.03 ஆம் தேதி கடைசி நாள் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 18, 2025
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம் பிடித்த மகன்

விருதாச்சலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அப்பு சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை செல்வராஜ் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் தந்தையின் கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அப்பு காதலியை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.