News December 12, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

image

பண்ருட்டி அருகே தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமிக்கு, அந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ள சங்கர் (67) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் பெற்றோரிடம் கூறிதை தொடர்ந்து, பண்ருட்டி மகளிர் போலீசாரிடம், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சங்கர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

கடலூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax<<>>.என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

News December 12, 2025

முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

image

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் , அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற டிச.17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

கடலூரில் நாளை குறைதீர் முகாம் அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி ஆகிய தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், நாளை(டிச.13) நடைபெற உள்ளது. இம்முகாமானது வட்ட வழங்கல் அலுவலர் அல்லது நுகர்வோர் குறைதீர்வு அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!