News December 30, 2025
கடலூர்: கொலை சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்பி!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் இன்று( டிச.30) கடலூர் வீ.காட்டுபாளையத்தில் மூதாட்டி கொலையுண்ட சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு கொலையாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது ஆய்வாளர் உதவிம் ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News December 31, 2025
கடலூர்: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கடலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி

அறந்தாங்கியைச் சேர்ந்த ஹரிதாஸ் (56) என்பவர் கடலூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் மனுவில், ‘குச்சிபாளையத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு ரூ.5.13 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், இதுவரையில் வேலை வாங்கித் தரவில்லை’ என்ற புகாரின் பேரில் கடலூர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை (32) என்பவரை இன்று கைது செய்தனர்.
News December 31, 2025
வழிபரி திருட்டில் ஈடுபட்ட 285 குற்றவாளிகள் கைது

கடலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 285 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.3,96,62,311 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


