News February 22, 2026
கடலூர்: குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு – சோகம்

சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரியை சேர்ந்தவர் பாலாஜி மகள் பவித்ரா (8). அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா நேற்று(பிப் 21) அதே ஊரில் உள்ள நிலத்திற்கு தனது தாத்தா கருணாநிதியுடன் சென்றார். அப்போது அங்குள்ள குளம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, திடீரென குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 25, 2026
கடலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News February 25, 2026
கடலூர்: டிகிரி போதும்… பேங்க் வேலை ரெடி

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 25, 2026
கடலூர்: மனமகிழ் மன்றத்தை திறந்து வைத்த எஸ்பி!

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், புதிதாக மனமகிழ் மன்றம அமைக்கப்பட்டது. அதனை இன்று(பிப்.25) கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். இம்மன்றத்தில் காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் TNPSC தேர்வு சம்பந்தமாக புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.


