News December 16, 2025

கடலூர்: குண்டர் சட்டத்தில் 2 பேர் அதிரடி கைது

image

சோழத்தரம் காவல்துறையினர் அறந்தாங்கியில் (நவ.16) சோதனை செய்தபோது, டூவீலரில் குட்கா கடத்திய சிவராஜ் சிங் (40), பன்னீர்செல்வம் (36) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில அடைத்தனர். இதில் சிவராஜ் சிங், பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.

Similar News

News December 19, 2025

கடலூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 19, 2025

கடலூர்: பைக் மோதி தொழிலாளி பலி

image

புதுப்பேட்டை அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலாளி சுப்பிரமணி (55). இவர் மணப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News December 19, 2025

கடலூர்: ரூ.64,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் விவரங்களுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!