News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

Similar News

News October 24, 2025

கடலூர்: பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்

image

பரங்கிப்பேட்டை அருகே தச்சக்காட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக நடைபெற்ற இருதரப்பு மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், சந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயராமன், சந்திரா தனித்தனியே கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 8 பேரை தேடி வருகின்றனர்.

News October 24, 2025

கடலூர்: கம்மியான விலையில் பைக் வேண்டுமா!

image

கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குழுவினரால், போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு 4 சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வருகிற அக்.30-ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

கடலூர்: பாம்பு கடித்து பெண் பலி

image

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!