News January 23, 2026

கடலூர்: கஞ்சா கடத்தியவர் மீது பாய்ந்த குண்டஸ்

image

குள்ளஞ்சாவடி அருகே கடந்த டிச.28 ஆம் தேதி காரில் கஞ்சா கடத்தி சென்ற மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த கணேசன்(57) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 375 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கணேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால, அவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News

News January 27, 2026

கடலூர்: அரசு பேருந்து மோதி முதியவர் பலி

image

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

கடலூர்: அரசு பேருந்து மோதி முதியவர் பலி

image

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

கடலூர்: ஆற்றில் மிதந்த ஆண் சடலம்

image

கடலூர், கொமத்தான்மேடு அருகே தென்பெண்ணையாற்றில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!