News March 28, 2025
கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தல்

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க அவரவர்களது வங்கி கணக்கு விபரங்களையோ மற்றும் செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களையோ, சுய விபரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். மேலும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 6, 2025
கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
ஆயுதப்படை காவலர் தங்க பதக்கம் பெற்று சாதனை

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி வேளச்சேரியில் கடந்த ஆக.3ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
News August 5, 2025
கடலூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

கடலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <