News April 5, 2024
கடலூர்: என்எல்சி கண்டித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சமனான இழப்பீடு, வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 26, 2026
கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிறப்பு பிரார்த்தனையாக பல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற பிரார்த்தனை செய்யப்படுகிறது. திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக மக்களால் கருதப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !
News January 26, 2026
117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம்!

கடலூரில் இன்று 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கடலூர் மாவட்ட 117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
News January 26, 2026
கடலூர்: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


