News December 25, 2025
கடலூர்: உயிரிழந்தவர்களில் உடல்கள் ஒப்படைப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 28, 2025
கடலூர்: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
கடலூர்: டூவீலர் – கார் மோதி பயங்கர விபத்து

வேப்பூர் அருகே உள்ள மா.புத்தூரை சேர்ந்தவர் கவிதா (36). இவர் மகேஸ்வரி (37) என்பவருடன் டூவீலரில் மங்களூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்களும் படுகாயமடைந்து, வேப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
கடலூர்: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

கடலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <


