News October 16, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.15) இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News October 15, 2025
கடலூர்: மத்திய அரசு வேலை.. ரூ.35,400 சம்பளம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 15, 2025
கடலூர்: மது குடிக்க இளைஞர் செய்த செயல்!

பண்ருட்டி அருகே செடுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மதுவை குடித்து விட்டும், மதுபாட்டில்களை உடைத்து விட்டும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேசை கைது செய்தனர்.
News October 15, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை முழு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம் வானமாதேவி 59 மி.மீ மழை, பண்ருட்டி 44 மி.மீ, அண்ணாமலை நகர் 19.4 மி.மீ, சிதம்பரம் 13 மி.மீ, கலெக்ட்ரேட் 9.3 மி.மீ, வேப்பூர் 9 மி.மீ, கடலூர் 8.2 மி.மீ, பரங்கிப்பேட்டை 3.2 மற்றும் வடக்குத்து பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது