News December 23, 2025

கடலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

கடலூர் மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க…

Similar News

News December 25, 2025

புதிதாக 277 வாக்குச்சாவடிகள்; ஆட்சியர் தகவல்!

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றது. முன்னதாக 2313 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், 1200 வாக்காளருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பிரித்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டது. எனவே 2590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

கடலூர்: உயிரிழந்தவர்களில் உடல்கள் ஒப்படைப்பு

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 25, 2025

கடலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!