News December 23, 2025

கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூரில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது.

Similar News

News December 24, 2025

கடலூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், கடலூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<> இங்கே க்ளிக் <<>>செய்யவும். ஷேர்!

News December 24, 2025

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

கடலூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியை சேர்ந்தவர் திருமால் (32). இவரது மனைவி விஷ்ணுபிரியா (31). திருமால் கடலூர், செம்மண்டலத்தில் உறவினர் வீட்டில் தங்கி ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகமாகியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!