News August 7, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக குடற்புழு மாத்திரைகள் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 7) ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 7, 2025
குறிஞ்சிப்பாடி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை ஆக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
கடலூர்: அரசு கல்லூரி மாணவன் வெண்கல பதக்கம்

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர் லோகேஸ்வரன் சர்வதேச அளவில் நடைபெற்ற தேசிய சீனியர் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இது இவரது இரண்டாவது சர்வதேச பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கடலூர் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News August 7, 2025
கடலூர்: சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை!

கடலூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, IT Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.20,000 வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை 8 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க!