News March 28, 2024
கடலூர்: ஆட்சியர் ஆய்வு

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வரை 30 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைவரின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது .இதில் தேமுதிக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர்கள் கொடுத்துள்ள சொத்து விவரம் மற்றும் ஆவணங்கள் குறித்து பரிசீலனை நடைபெற்றது.
Similar News
News February 13, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டில் தங்க வைத்து, பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி சிசு இறந்து விட்டது. இதுகுறித்து தகவல் அந்த மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் திட்டக்குடி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


