News December 29, 2025
கடலூர்: ஆட்சியரிடம் 685 மனுக்கள் அளித்த பொதுமக்கள்

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 685 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 30, 2026
கடலூர்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி!

இளைஞர் விளையாட்டு திருவிழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை(ஜன.31) கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 14 ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் நேரடியாக கலந்து கொள்பவர்கள் <
News January 30, 2026
கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 30, 2026
கடலூர் அருகே கொடூரம்: 2 சிறுவர்கள் கைது

திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது பெண் குழந்தையை, 16 வயது சிறுவன் தூக்கிச்சென்று, சேலையால் கட்டிய ஊஞ்சலில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். அப்போது உடனிருந்த 17 வயது சிறுவன், அதனை வீடியோ எடுத்து சிறுமியின் தாயிடம் காண்பித்துள்ளான். இதில் அதிர்ச்சியடைந்த அவர், திட்டக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.


