News October 11, 2025
கடலூர் அருகே தொழிலாளி பரிதாப பலி

பெண்ணாடம் அடுத்த தொளாரை சேர்ந்தவர் தொழிலாளி ஆனந்த செல்வம் (43). இவர் இன்று தனது பைக்கில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பகுதியில் சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த ஆனந்த செல்வம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 11, 2025
கடலூர் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாப பலி

திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (67). இவர் நேற்று காலை வெண்கரும்பூர் சொசைட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 11, 2025
கடலூர்: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு<
News October 11, 2025
35% மானியம்: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

கடலூரில் விலைப் பொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், பொது பிரிவினருக்கு 25 % மானியமும், மற்ற பிரிவினர்களுக்கு கூடுதலாக 10% மானியமும் வழகப்படும். வேளாண் தொழில் முனைவோர்கள் வேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் 9659299219 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.