News July 8, 2025

கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

image

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News July 8, 2025

கடலூர்: பள்ளி வாகனத்தில் பயணித்தவர்கள் விவரம்

image

கடலூர் அருகே இன்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனத்தில் பயணித்த மாணவர்கள் சாருமதி (15), விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் மற்றும் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

News July 8, 2025

ரயில் விபத்து குறித்து விசாரணை – கடலூர் ஆட்சியர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 08) காலை ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து கடலூர் ஆட்சியர் கூறுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் காரணமா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக கலெக்டர் சிபி ஆதித்ய செந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

image

கடலூர், செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!