News November 5, 2025

கடலூர் அருகே சோகம்: கார் மோதி 2 பேர் பலி

image

கடலூர் அன்னவெளியை சேர்ந்த வடிவேல் (35), பாஸ்கர் (1) மற்றும் பெரியகாட்டு சாகை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (45) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மூவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு அன்னவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் நின்றுகொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியதில் வடிவேல், ஜெயராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

Similar News

News November 5, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

உணவு பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மறுசுழற்சி செய்ய முடியாத, சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ள ஆட்சியர் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ‘9444042322’ என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

கடலூர்: 9 ஹோட்டல்களுக்கு அபராதம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று 86 சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 9 உணவகங்களிலிருந்து 7.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.12,000 விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!