News August 16, 2025
கடலூர் அருகே அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

காட்டுமன்னார்கோயில் அடுத்த கலியமலையை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் திலிப்குமார் (21). தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்த திலிப்குமார் நேற்று பைக்கில் பொய்யாபிள்ளைசாவடி-காட்டுமன்னார்கோயில் சாலையில் சென்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திலிப்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
கடலூர்: திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனால் விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக திருநள்ளாறுக்கு நாளையும் (6.3.2026), நாளை மறுநாளும் (7.3.2026) முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 5, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்
News March 5, 2026
கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற <


