News October 31, 2025
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.
Similar News
News October 31, 2025
உதவித்தொகை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற <
News October 31, 2025
கடலூர்: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

கடலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
கடலூர்: ஹோட்டல் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுதானிய உணவு உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிர் சுய உதவி குழுவினர் வரும் நவ.10-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


