News November 6, 2025

கடலூர்: அரசு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

image

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (37). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் (41) என்பவர் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை நேற்று கைது செய்துள்ளனர்.

Similar News

News January 23, 2026

கடலூர்: கஞ்சா கடத்தியவர் மீது பாய்ந்த குண்டஸ்

image

குள்ளஞ்சாவடி அருகே கடந்த டிச.28 ஆம் தேதி காரில் கஞ்சா கடத்தி சென்ற மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த கணேசன்(57) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 375 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கணேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால, அவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

News January 23, 2026

கடலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

கடலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

கடலூர்: விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

image

வேப்பூர் அருகே ஐவதகுடியில் நேற்று மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(51). அரசு பள்ளி ஆசிரியரான இவர் சென்ற கார், தடுப்பு கட்டையில் மோதி எதிர் திசையில் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 கார்களும் கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஆரோக்கியதாஸ் சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!