News April 27, 2024
கடலூர்:தர்பூசணி விலை இரு மடங்கு உயர்வு

சிதம்பரம் அண்ணாமலை நகர், சிவபுரி மெயின்ரோடு, கொற்றவன்குடி தோப்பு போன்ற பகுதிகளில் தர்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்பனையான தர்பூசணி தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்கள் அதிக அளவில் வாங்குவதாலும் , தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 21, 2025
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர் லாரி மோதி பலி

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (16) புதுச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று சொந்த வேலை காரணமாக திருத்துறையூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஊராட்சி அலுவலகம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 20, 2025
கடலூர்: 10th பாஸ் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் ( Driver Cum Delivery) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்!
News April 20, 2025
ரெட்டிச்சாவடி: பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் புதுக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து விட்டு நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த கோகுல் (19) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கோகுலை கைது செய்தனர்.