News March 19, 2024
கடலூர்,சிதம்பரத்தில் பாமக போட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர்,சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.கடலூரில் வழக்கறிஞர் பாலு,சிதம்பரத்தில் சங்கர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்ப்பு
Similar News
News October 24, 2025
கடலூர்: பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்

பரங்கிப்பேட்டை அருகே தச்சக்காட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக நடைபெற்ற இருதரப்பு மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், சந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயராமன், சந்திரா தனித்தனியே கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 8 பேரை தேடி வருகின்றனர்.
News October 24, 2025
கடலூர்: கம்மியான விலையில் பைக் வேண்டுமா!

கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குழுவினரால், போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு 4 சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வருகிற அக்.30-ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
கடலூர்: பாம்பு கடித்து பெண் பலி

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


