News April 15, 2025
கடலூரில் வேலை வாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் 17/4/2025 வியாழக்கிழமை அன்று கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற உள்ளது.
Similar News
News April 18, 2025
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம் பிடித்த மகன்

விருதாச்சலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அப்பு சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை செல்வராஜ் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் தந்தையின் கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அப்பு காதலியை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
News April 17, 2025
வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்நாளில் ஸ்ரீ முஷ்ணம் பூவராகவரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..
News April 17, 2025
கடலூர்: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய tnpsc.gov.in என்ற இணையத்தில் பார்க்கவும். இதை ஷேர் செய்யவும்