News April 3, 2025
கடலூரில் வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Branch Intern)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே <
Similar News
News April 9, 2025
கடலூர்: மீனவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதை உங்க மீனவ நண்பர்களுக்கு SHARE செய்ங்க…
News April 9, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 12.4.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News April 8, 2025
தமிழக ஆளுநருக்கு சாட்டையடி – பண்ருட்டி எம்.எல்.ஏ

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று தந்த சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி., உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.