News February 16, 2025

கடலூரில் விபத்து: சென்னையை சேர்ந்த 2 பேர் பலி

image

பாடி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாத் (36). இவர், தனது நண்பர்களான பள்ளிக்கரணை பிரபாகரன் (36), மதுரவாயல் உதய பாஸ்கர் (38), தரமணி ஜீவன்ராஜ் (20), ஆதம்பாக்கம் அப்துல் ஹக்கீம் (35) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். இவர்களது கார், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் அருகே நேற்று (பிப்.15) இரவு 12.45 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சபரிநாத், பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News March 3, 2026

சென்னைக்கு புதிய பறக்கும் ரயில் சேவை!

image

பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற மார்ச் 5ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் 10ஆவது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 3, 2026

JUST IN: சென்னையில் கோர விபத்து!

image

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

News March 3, 2026

சென்னை: ஏடிஎம் வாசலில் நூதன மோசடி

image

எம்.கே.பி.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பிஷு சர்தா (31). கேட்டரிங் ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஏ.டி.எம்-ல் பணம் செலுத்த சென்றார். அங்கிருந்த நபர், பணத்தை வாங்கி கொண்டு ஆன்லைன் வாயிலாக, வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எம்.கே.பி.நகர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!