News June 11, 2024
கடலூரில் மாதர் சங்கம் சார்பில் மனு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று மனு கொடுக்க வந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு முழுவதும்100க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவைகள் அனைத்தும் பெண்களுக்கு தனிநபர் கடன் வழங்குகின்றன இதில் அதிக வட்டி வசூலிப்பதாகவும் பெண்கள் வட்டி கட்ட முடியாவிட்டால் மனரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் இதனை ஒழுங்குபடுத்த வலியுறுத்தினர்.
Similar News
News November 10, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 9, 2025
கடலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<


