News April 6, 2025
கடலூரில் ஒரே மாதத்தில் 22 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த காலங்களை விட தற்போது மாவட்டத்தில் விபத்து பெருமளவு குறைந்துள்ளது. இதில் கடந்த மார்ச் மாதத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் 218 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 248 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக 196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
News April 11, 2025
விருத்தாசலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது

விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட விருத்தாசலத்தை சேர்ந்த வசந்தி (45), ராமச்சந்திரன் (65), சரண்ராஜ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.