News March 19, 2024
கடலூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக வருகின்ற 24 ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில் கடலூரில் வருகின்ற மார்ச் 30 மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News February 2, 2026
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஓட்டலை திறந்து வைத்த முதல்வர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. அதனை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக இன்று(பிப்.02) திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர்சி சிபி ஆதித்த செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அலுவகர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News February 2, 2026
கடலூர்: கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு மாவு கட்டு

சோனஞ்சாவடியை சேர்ந்த பூமிநாதன் (50) என்பவர் கடந்த 30-ம் தேதி, தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட முதுநகர் போலீசார் வைரங்குப்பத்தை சேர்ந்த சுதாகர் (21), முகில் (எ) முகேஷ்(21) ஆகியோரை கைது செய்தனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்ற போது, தவறி இரண்டு பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 2, 2026
கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


