News November 15, 2025
கடலூரில் இன்று மின்தடை ரத்து

கடலூர் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நாளை டெட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று(நவ.15) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெட் தேர்வு காரணமாக மாவட்டம் முழுவதும் மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே.. வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!
News November 15, 2025
கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடலூர், சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் கடந்த 2022 வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால், அப்பெண் கற்பமடைந்தார். பெண்ணின் தாய் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், நேற்று மணிகண்டனுக்கு 10ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
News November 15, 2025
கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


