News December 30, 2025
கடலூரரில் 1,472 விவசாயிகள் பயன்!

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,472 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் நுண்ணீர் பாசனத் திட்டம், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கல், இடுப்பொருட்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட தனிநபர் மானியத் திட்டம், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் திட்டம் இடம்பெற்றுதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 4, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி பலி

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்த ஞான ஜோதி (63) என்பவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம்- மேட்டுக்குப்பம் சாலையில் சென்றபோது, திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஞானஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சபரி மகள் இமையா (14). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இமையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த இமையா நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 4, 2026
கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சபரி மகள் இமையா (14). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இமையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த இமையா நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


