News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
குமரி: திமுக நிர்வாகி & குடும்பத்தினர் கைது

குமரி, கருங்கல் பகுதியில் உள்ள ஷார்லின் சேம் கவரிங் கடையில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண், கடை ஊழியரின் கவனத்தை திருப்பி ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கமுலாம் பூசிய நகைகளை திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தி.மு.க. பேரூராட்சி துணைத்தலைவி பால்தங்கம், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர். இதில் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
குமரி: வங்கி வேலை..ரூ. 48,000 சம்பளம்

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
குமரி: அரசு பேருந்து ஏறியதில் ஒருவர் பலி

நாகர்கோவிலில் அருகே கட்டையன் விளையை சேர்ந்தவர் அசாரி (65). இவர் கட்டையன் விளையில் ரோட்டை கடக்கும் போது அந்த வழியாகச் சென்ற பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அசாரி கீழே விழுந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்த அசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


