News July 12, 2024
கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

நாகை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆண்டவர், செந்தில், சாந்தகுமார், சேதுராமன், குமார் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் குமார் தவிர மற்ற 4 மீனவர்களும் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இதனால் அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் 3 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 45 கிமீ தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
Similar News
News January 26, 2026
நாகையில்குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்!

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது குடியரசு தின விழா இன்று ஜன.26ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News January 26, 2026
நாகை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

நாகை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News January 26, 2026
நாகை: பூச்சி மருந்தை குடித்து தற்கொலை

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராமன். மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு, பல்வேறு உடல்நல கோளாறுகள் எழுந்துள்ளது. இதனால் விரகத்தியடைந்த ராமன் சம்பவத்தன்று, மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயனற்றுள்ளார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரணியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


