News August 29, 2024
கடற்கரை தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே சென்னை மாநகராட்சி குப்பை கையாளும் பணியை மேற்கொள்கிறது. ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட நிலையில், அவசர அவசரமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.
News September 17, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 16) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 17, எழும்பூர் – 19.9, கிண்டி – 9.6, மாம்பலம் – 34.8, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 32.3, புரசைவாக்கம் – 26.4, தண்டையார்பேட்டை – 23.4, ஆலந்தூர் 1.2, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 6.7 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு..?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று(செப்.17)ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும், டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது காலை 6.00 மணிக்கு அமலில் வந்தது.